மண் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தருமபுரி, மே 22- பாலக்கோடு அருகே சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கும் மண் சாலையை சீரமைக்க வேண்டும், என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பேளார ஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் கிராமத்தில், சுடுகாட் டிற்கு செல்லும் மண் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையா னது சமத்துவபுரம், கக்கன்ஞ்சிபுரம், தளவாய்ஹள்ளி புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும், ரெட்டியூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இவ் வழியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கரும்பு உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங் கள் சென்று வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை மண் சாலையாகவே உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாகவும் குண்டும், குழியுமாக வும் மாறிவிடுவதால், வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வா கம் துரித நடவடிக்கை மேற்கொண்டு மண் சாலையை சீர மைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
ஆட்சியர் வாகனம் முன்பு தற்கொலை முயற்சி: 5 பேர் கைது
சேலம், மே 22- மாவட்ட ஆட்சியர் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற தாக 5 பேரை ஆத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி புதன், வியாழனன்று ஆய்வு செய்தார். அப்போது, ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் கால னியைச் சேர்ந்த பொதுமக்கள், அப்பகுதியிலுள்ள முத்துமாரி யம்மன், பரிவார தெய்வங்கள் உள்ள கோவிலுக்கு குடமு ழுக்கு, தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர், கோவிலில் திருவிழா நடத்துவதற்கு தங்களுக்குதான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இருதரப்பு கோரிக்கையையும் கேட்ட ஆட்சியர், வட்டாட் சியர் மூலம் பேச்சுவா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகக் கூறி னார். இதன்பிறகு ஆட்சியர் அங்கிருந்து தனது வாகனத்தில் செல்ல முற்பட்டபோது, அங்கு நின்ற வசந்தா என்பவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்த போலீசார் அவரை மீட்டு பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், தீக்குளிக்க முயன்றதாக 17 பேர் மீது ஆத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ராமநாயக்கன் பாளையம் வெள்ளையன் மகன் குப்பமுத்து (46), சீனிவாசன் மகன் கனகசபை (47), குப்பமுத்து மனைவி வசந்தா (38), சுரேஷ் மனைவி சங்கீதா (38), கனகசபை மனைவி சாந்தி (38) ஆகிய 5 பேரை புதனன்று கைது செய்தனர். மேலும், 12 பேரை தேடி வருகின்றனர்.
ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை நாமக்கல்,
மே 22- பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், முத்துமாரியம் மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயா (65). இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டு வேலை செய்து வந்த விஜயாவிற்கு, உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் பாதிப்பு காரணமாக மனமுடைந்த நிலையிலிருந்த விஜயா, வியாழ னன்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத் தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீ சார், வெப்படை தீயணைப்பு வீரர்கள், மீனவர்களின் உதவி யுடன் ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பள்ளிபாளை யம் காவிரி ஆற்றில் அவ்வப்போது இளம் பெண்கள் முதல் வயதான நபர்கள் வரை பலரும் அவ்வப்போது பல்வேறு காரணங்களால் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. எனவே, பாலத்தின் மீது உயரமான தடுப்புகள் அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.