உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கிடுக
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங் களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என வலி யுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உயர்த் தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண் டும். வைப்பு நிதி கணக்கு சேவைகளை பய னாளிகள் வசதிக்கேற்ப எளிமைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் 80 லட்சம் ஓய்வூதியர்களுக்கு நிதி இல்லை என்று வஞ்சிக்கக்கூடாது. 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி ஒவ் வொரு தொழிலாளியும் பணிபுரியும் நிறுவ னங்கள் மாறும்போது பிடித்தம் செய்த பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, எம்எல்எப் உள் ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், இரும்பாலை சாலையிலுள்ள மண்டல வைப்பு நிதி ஆணையர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் வி. இளங்கோ, நிர்வாகிகள் சுரேஷ்குமார், பி. பன்னீர்செல்வம், எல்பிஎப் நிர்வாகி பொன்னி பழனியப்பன், ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் சம்பத், ஐஎன்டியுசி நிர் வாகிகள் நடராஜன், முருகேசன், ஏஐசிசி டியு நிர்வாகி நடராஜன், ஏஐயுடியுசி நிர் வாகி மோகன், எச்எம்எஸ் நிர்வாகி கணே சன், எம்எல்எப் நிர்வாகி சந்திரசேகர் உட் பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.