மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம்
உதகை, ஜூன் 15– மக்களின் வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு கிளர்ச்சி இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. கூடலூர் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்திற்கு ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை ஏற்றார். கட்சியின் மாவட்டச்செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் துவக்கிவைத்து உரையாற்றினார். இதில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராசி ரவிக்குமார், சி.மணிகண்டன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, எருமாடு பகுதியில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு கே.ராஜன், ஜிஷா சண்ணி ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. யோகண்ணன் மற்றும் அனிபா மாஸ்டர் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை கோவை பீளமேடு நகரக்குழு சார்பில், மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தில் மத்தியக்குழு உறுப்பினர் எம்.குண சேகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பீள மேடு நகரச் செயலாளர் ஏ.மேகநாதன் தலைமை யில் நடைபெற்ற இயக்கத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.அஜய்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், தி.மணி, சி.ஜோதிமணி, தி.தினேஷ் ராஜா மற்றும் 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.குளம் எஸ்.எஸ்.குளம் கிழக்குக்குழு சார்பில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. விளாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பயணத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குண சேகரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கோபால்சங்கர் சிறப்புரையாற்றினர். இதேபோல, எஸ்எஸ்.குளம் மேற்குக்குழு சார்பில் மூன்று இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கீரணத்தம் பகுதியில் துவங் கிய குழு பண்ணாரியம்மன் நகர், கீரணம்புதுப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இடிகரையில் நிறைவடைந்தது. மார்க்சிஸ்ட் கட்சயின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.கோபால் தலைமை ஏற்றார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மகேஷ்வரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இதேபோல சரவணம்பட்டியில் துவங்கிய குழுவிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் உஷா தலைமையேற்றார். பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் உரையாற்றினார். இதே போன்று, உடையாம்பாளையத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்தை மத்தியக்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் துவக்கிவைத்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ. இராமமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். மேட்டுப்பாளையம் தாலுகாக்குழு சார்பில், காரமடை நகரத்தில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்தில், தாலுகா செயலாளர் கனகராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஆத்துப்பாளை யம் பகுதியிலிருந்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை சிபிஎம் மூத்த தலைவர் எம்.ராஜ கோபால் துவக்கி வைத்தார். இதேபோன்று, பெருமாநல்லூர், சேடர்பாளையம் ஆகிய பகுதி களிலிருந்து பிரச்சாரம் துவங்கி, பாண்டியன் நகரில் நிறைவடைந்தது. இதில், கட்டி முடிக் கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங் களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வெள்ளம்போல் தேங்கும் மழை நீரை முறையாக ஆற்றுக்கு கொண்டு செல்ல ராஜாவாய்க்கால் அமைக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட் டுள்ள குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநி லக்குழு உறுப்பினர் சம்சீர் அகமது, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட் டக்குழு உறுப்பினர் எ.சிகாமணி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். 15.வேலம்பாளையம் பெரியார் காலனி பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். 15.வேலம்பாளையம் அரசு மருத்துவமனையை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அணைப்பாளையம் ரயில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. இதில் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் ர.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு மாநகரம் திருப்பூர் வடக்கு மாநகரத்தில் 3 பகுதிகளி லிருந்து பிரச்சாரம் துவங்கியது. முருங்கப்பா ளையம் பகுதியிலிருந்து துவங்கிய பிரச்சா ரத்தை மூத்த தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், பத்மாவதிபுரத்தில் தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வுகளில் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.சௌவுந்தரராசன், ஆர். மைதிலி, வை.ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, குப்பை வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. தெற்கு மாநகரம் தெற்கு மாநகரப் பகுதியில் மிஷன் வீதி கார்னர் பகுதியில் துவங்கிய பிரச்சார இயக் கத்தை மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்ல துரை, முத்தையா நகர் பகுதியில் எஸ்.சுந்தரம், கல்லம்பாளையம் பகுதிகளில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் பங்கேற்றார். இதில், முத்தையன் நகர் பகுதியில் 250 நபர்களுக்கும், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கும் உடனடியாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். சேதமடைந் துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டன. ஊத்துக்குளி ஊத்துக்குளி பேரூராட்சியில் நடைப்பயண பிரச்சார இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் பங்கேற்றார். இதே போல் நடுப்பட்டி ஊராட்சி, புலவர்பாளை யத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு தாலு காக்குழு உறுப்பினர் க.பிரகாஷ் தலைமை வகித்தார். பல்லகவுண்டம்பாளையத்தில் நிறை வடைந்தது. திருமுருகன்பூண்டி திருமுருகன்பூண்டி ஆரம்பப்பள்ளியினை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண் டும். ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியினை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நக ராட்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இருசக்கர வாகன பிரச்சாரம் கொட்டும் மழையிலும் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நகர்மன்ற உறுப் பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவிநாசி அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். 100 நாள் வேலைத்திட் டத்தை நகராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர், காந்தி புரம் பகுதியிலிருந்து கொட்டும் மழையிலும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி நடைபயணத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கொடுமுடி- மொடக் குறிச்சி வட்டத்தில் தொடங்கிய பிரச்சார இயக் கத்திற்கு தாலுகா செயலாளர் எம்.சசி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.விஜயராகவன், முருகேசன். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடுமுடி ஊஞ்ச லூர் நடுப்பாளையம் மற்றும் கருமாண்டம் பாளையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது. கோபி அதன் சுற்றுப்புற பகுதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரச்சார இயக்கம் தாலுகா செயலாளர் க.பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்ச கவுண்டம்பாளையத்தில் தொடங்கிய மக்கள் சந்திப்பு பிரச்சாரம் கள்ளிப்பட்டி, பங்களா புதூர், அண்ணாநகர், டி.என்.பாளையம், தாசப் பகவுண்டன்புதூர், கொடிவேரி, காசிபாளையம், கோபி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக ளில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த இயக்கத் தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர் ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா, ததீஒமு பொருளாளர் மாரிமுத்து, விதொச மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்சாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திண்டலில் தாலுகாக்குழு உறுப்பினர் வி. பிரபு தலைமையில் நடைபெற்றது. காரப்பாளை யத்தில் துவங்கிய பிரச்சாரம் புது காலனி சின்ன மேடு மற்றும் செங்கோடம் பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, தாலுகா செயலாளர் என்.பாலசுப்ரமணி, மாவட்ட குழு உறுப்பினர் பா.லலிதா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். ஈரோடு மாநகரம், சம்பத் நகரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சனியன்று நடைபெற்றது. மாணிக்கம் பாளையம் கிளைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். நாராயணவலசு, திருமால் நகர், கவர்ன்மென்ட் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச் சாரம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, டி.நவீன், நகர செயலாளர் வி.பாண்டியன் மூத்த தோழர் பா. மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தருமபுரி காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை வட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். காமராஜ் நகர் மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். நீண்ட ஆண்டு காலம் வீடு கட்டி குடியிருப்போருக்கும், விவசா யம் செய்து வருபவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட் டம், காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிக ளில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் சி.கலாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்சேபனையற்ற இடங்களில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அம்மா சுற்றுச்சூழல் பூங்கா அமைத்ததில் ஊழல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு, பால் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் மேற்கு மாநகரச் செயலாளர் பி.கணேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார். இதே போன்று கந்தம்பட்டி, பனங்காடு, அரியாக் கவுண்டம்பட்டி, அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சேலம் வடக்கு சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில், சாமிநாதபுரம், குரங்குசாவடி, ரத்தினசாமிபுரம், சின்னேரிவயக்காடு, ஆலமரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடைபெற்றன. இதில் மாநில செயற்குழு உறுப் பினர் செ.முத்துக்கண்ணன், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ஏலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடு பட்டனர். புதுசத்திரம் ஒன்றியம், ஏலூரில் நடை பெற்ற இந்த இயக்கத்திற்கு, சிபிஎம் பி.ஜோதி மணி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியச் செயலா ளர் எஸ்.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.