தேஜஸ் ரக போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விவசாய நிலத்தில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இருகூர் பகுதியில் தேஜஸ் ரக போர் விமானம் வழக்கம் போல் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானத்தில் இருந்து 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழண்டு விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. இதற்கிடையே விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தபோதும் விமானம் சூலூர் விமானப்படைத்தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.