பாசனக் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்
உடுமலை, ஜூன் 29- பாசனக் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டம், குடிமங்க லம் ஒன்றிய சிறப்பு பேரவை ஞாயிறன்று பெதப்பம்பட்டியில் நடைபெற்றது. சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் பால தண்டபாணி துவக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜகோ பால் வாழ்த்திப் பேசினார். இக்கூட் டத்தில், ஆனைமலை - நல்லாறு அணைத்திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். விவசாய விளை பொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க எம்.எஸ்.சுவாமிநாதன் கமி சன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில், நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை அமுல்படுத்தக் கூடாது. பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பிஏபி 4 ஆவது மண்டல பாசனத்திற்கு தண் ணீர் திறக்க உள்ளதால், கால்வாய் களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, கடைமடை வரை நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலை வராக தங்கவடிவேல், செயலாள ராக விஜயகுமார், பொருளாளராக மோகனசுந்தரம், துணைத்தலைவ ராக திருமலைசாமி, துணைச்செயலாள ராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் நிறைவுரையாற்றினார்.