tamilnadu

img

அடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயலும் இந்துமுன்னணி பிரமுகர் - தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

 

கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகம். இவருக்கு செம்மாண்டம்பாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. இதன் அருகே சமீபத்தில் திருப்பூரை  சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் என்பவர் இடம் வாங்கியுள்ளார். வழிதடம்  தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வழிதடத்தை  முருகேசன் அடைக்க முயன்ற போது , அதை திலகம் தடுத்துள்ளார். அப்போது முருகேசன் திலகத்தின்  செல்போனை  தட்டி விட்டதுடன், அவரையும் தாக்கினார்.

இதனையடுத்து திலகம் தன்னை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி  கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்  கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் முருகேசனுக்கும் ,  திலகத்திற்கும்  வாக்குவாதம் நடக்கும்  காட்சிகளும் , செல்போனை  தட்டிவிட்டு, பெண்ணை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;