கோவையில் சோசியம் பாரத்த தாய் "தனக்கு கை கால்கள் வராது"எனக்கூறியதால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி. இவரது மனைவி தனலட்சமி. இவருக்கு சசிக்குமார் என்ற மகனும் மனநலம் பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகளும் உள்ளனர். திருமணமான சிசிகுமார் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வசித்து வந்த தனலட்சுமி, குடும்ப பிரச்சனை காரணமாக சோசியம் பார்த்துள்ளார் . சோசியர் வரும் காலங்களில், தனலட்சுமிக்கு கைகால்கள் வராது என கூறியதால் மனமுடைந்து தனலட்சுமி தனது மகனை தொலைபேசியில் பேசி உள்ளார். தனலட்சுமி தனது மகனிடம் " நாங்கள் இருப்பது உனக்கும் பிரச்சனையாக உள்ளது" தங்கையை கவனிக்க முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சசிக்குமார் அவ்வாறு ஒன்றும் நடக்காது என ஆறுதல் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த சசிக்குமார் தனது நண்பரை தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்குமாறு கூறியுள்ளார். அவரது நண்பர் வீட்டில் சென்று பார்க்கும் போது தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சுகன்யா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து துடியலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..