tamilnadu

img

மாதர் சங்க மாநாடு

மாதர் சங்க மாநாடு

சேலம், ஜூன் 16 – நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக் கும் விரிவுபடுத்த வேண்டும் என மாதர் சங்க மாநாடு வலியு றுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெத்த நாயக்கன்பாளைய 3 ஆவது தாலுகா மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா தலைவர் ம.துளசி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த உறுப்பினர் ந.வீரம்மாள் கொடி யேற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி மாநாட்டை  துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை க.பெருமா, வரவு- செலவு அறிக்கையை ந.மேதினம் ஆகியோர் முன்மொழிந்த னர். இதில், மாநிலச் செயலாளர்கள் ஜி.இராணி, ரா.சோபனா  ஆகியோர் உரையாற்றினர். இதில்,  ஐஸ்வர்யம் நகர் பூங்காவை சீரமைக்க வேண்டும்,  100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு  படுத்த வேண்டும், பட்டா கேட்டு விண்ணப்பித்த அனை வருக்கும் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், தாலுகா தலைவராக க.பெருமா, செயலாள ராக ந.மேதினம், பொருளாளராக சி.இந்திராணி உள்ளிட்ட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.