tamilnadu

மே 20 வேலை நிறுத்தத்தை மாபெரும்

மே 20 வேலை நிறுத்தத்தை மாபெரும் 

கோவை, மே 7- ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, மே 20 ஆம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத் தில் மின்வாரிய ஊழியர்கள் முழு மையாக பங்கேற்று மாபெரும் வெற்றி பெறச்செய்வது என மின்வா ரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது.  தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மே-20 அகில இந்திய  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருத்தரங்கம் கோயமுத்தூர் மலை யாள சமாஜத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு, சிஐடியு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை ஏற்றார். தொழிலாளர் சம் மேளன வட்டத் தலைவர் ஆர்.ஜி‌. சுகவனம் வரவேற்றார். தொழிலா ளர் சம்மேளனம் மாநில இணைச் செயலாளர் டி கந்தவேல், சிஐடியு  மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், மின்கழக கணக்காயர் களத் தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் எஸ்.நாகராஜன், மின் கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்க திட் டச் செயலாளர் சு.சந்திரன், தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்க  பொதுச் செயலாளர் மு.சுப்பிரமணி யன், டிஎன்இபி எம்ப்ளயீஸ் பெடரே ஷன் பொதுச்செயலாளர் அ.சேக் கழார், ஐஎன்டியுசி(சேவியர்) மாநி லப் பொருளாளர் எஸ். பாலசுப்ர மணியம், ஐஎன்டியுசி (சொர்ண  ராஜ்) மாநில இணைச் செயலாளர்  ஆர்.செல்வராஜ், டிஎன்இபி டாக்டர்  அம்பேத்கர் எம்ப்ளயீஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் பி. அருணகிரி, டிஎன்இபி எம்ப்ளா யீஸ் பெட்ரேஷன் மாநிலத் தலை வர் ஜெ.எல்.பாஸ்டின்ராஜ், தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்க  மாநிலச் செயலாளர் க.இளங்கோ வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், ஏஇ எஸ்யு வட்டச் செயலாளர் எம் மகேந் திரன் நன்றி கூறினார். இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், பொதுத்துறை நிறு வனங்களை எல்லாம் ஒன்றிய மோடி அரசு சூறையாடுகிறது. கார்ப் ரேட் நலனுக்காக தனியார் மய நடவ டிக்கைகளை வேகப்படுத்துகிறது. தொழிலாளர் சட்ட தொகுப்புகளை  நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி, தொழிலாளர்களின் அடிப் படை உரிமைகளை பறிக்கிறது. தொழிற்சங்கம் வைக்கும் அடிப் படை உரிமையைக்கூட பறிக்கிறது.  இதுபோன்று தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கின்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண் டித்து நடைபெறும் பொது வேலை  நிறுத்த போராட்டத்தை வெற்றி யடையச்செய்வோம் என்றனர்.