tamilnadu

img

சிபிஐ மாநில மாநாட்டிற்கான இலட்சினை வெளியீடு

சிபிஐ மாநில மாநாட்டிற்கான இலட்சினை வெளியீடு'

சேலம், ஜூன் 24- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற் கான இலட்சினை செவ்வாயன்று வெளி யிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில 26 ஆவது மாநாடு, ஆகஸ்ட்  15 முதல் 18 ஆம் தேதி வரை சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநாட்டின் இலட்சினை வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  இலட்சினையினை வெளியிட, நாடாளு மன்ற உறுப்பினர் கேசுப்பராயன் பெற்றுக்கொண்டார். இதன்பின் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசு கையில், மாநாட்டின் முதல் நாளில் ‘கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்கும் கருத் தரங்கமும், இரண்டாம் நாளில் ‘வெல்க  ஜனநாயகம், வீழ்க பாசிசம்’ என்ற  தலைப்பில் நடைபெறும் சிறப்பு கருத் தரங்கில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணி கொள்கைக்காக உருவாக்கபட்ட கூட் டணி. தமிழகத்தில் ஒரு கூட்டணி இவ் வளவு ஆண்டுகள் இருந்ததாக வர லாறு இல்லை. இந்த கூட்டணி எஃகு கோட்டை போல இருக்கிறது. எறும்பு போன்ற பாஜக-வால் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக தலைமையில் ஆட்சி  அமையும் என்று கூறுவது வேடிக்கை யானது. மேலும், முருகன் பெயரில்  தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக் கின்றனர். முருகன் மாநாட்டில் அரசியல் பேச மாட்டோம் என்று கூறிவிட்டு, இந் துக்களின் வாக்குகள் குறித்தும், இந்து  சமய அறநிலைத்துறையை நீக்க வேண் டும் என்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது கண்டனத்திற்குரி யது. மேலும், பெரியார், அண்ணா பற்றி  தவறான கருத்து தெரிவித்தபோது, அதனை அதிமுக எதிர்க்கவில்லை. அண்ணாவின் பெயரில் கட்சியை நடத் திக்கொண்டு, அதனை எதிர்க்க வில்லை. ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பெய ரில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் உள்ளாரோ? அவரை கட் டாயப்படுத்தி தான் கூட்டணியில் சேர்த்துள்ளனரோ? என்ற கேள்வி எழு கிறது, என்றார்.