tamilnadu

img

லோகோ கேப்களும் குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும்

லோகோ கேப்களும் குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும்

டிஆர்இயு, ஏஐஎல்ஆர்எஸ்யு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப். 30- அனைத்து லோகோ கேப் களும் குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஈரோட்டில் டிஆர் இயு மற்றும் ஏஐஎல்ஆர் எஸ்யு சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து லோகோ கேப்களும் ஏர் கண்டி ஷனிங் செய்யப்பட வேண்டும். லோகோக் களில் கழிப்பறை வசதி செய்யப்பட வேண் டும். லோகோவில் கருவிப் பெட்டியை வைக்க வேண்டும். பனி கால பாதுகாப்பு கரு வியை கேபினில் பொருத்த வேண்டும். உபகர ணங்களை பொருத்தும் போது அதன் இருப் பிடத்திற்கு சீரான தன்மையை பராமரிக்க வேண்டும். சரியான சூரிய ஒளி திரை மற்றும்  பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப் பட்ட இருக்கையை வழங்க வேண்டும். கேப் பின் உள்ளே சத்தம் மாசுபாட்டைக் குறைக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு லோகோ செட் முன் புதனன்று டிஆர்இயு மற்றும் ஏஐஎல்ஆர்எஸ்யு சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐஎல்ஆர் எஸ்ஏ சேலம் கோட்டத் தலைவர் சீனிவாச  பட் தலைமை வகித்தார். சேலம் கோட்ட  துணைச் செயலாளர் ரியாஸ்  வரவேற்றார். டிஆர்இயு சேலம் கோட்டச் செயலாளர்  முரு கேசன் வாழ்த்தி பேசினார்.  இறுதியாக ஏஐ எல்ஆர்எஸ்ஏ சேலம் கோட்டப் பொருளா ளர் அயூப் நன்றி கூறினார். இதில், ஏராள னோர் கலந்து கொண்டனர்.