tamilnadu

img

சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

தருமபுரி, ஜூன் 28- பாலக்கோடு அருகே குடி யிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த சேவலை தூக்கிச்சென்ற சம்பவம் அப்பகுதியினரி டையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பெல்ரம்பட்டி,  பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளிலி ருந்து யானை, காட்டுப்பண்றி, மான், சிறுத்தை போன்ற விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழை கின்றன. இந்நிலையில், சனியன்று அதிகாலை பாலக் கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த  விநாயகம் என்பவரின் வீட்டின் முன்பு வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த சேவல் ஒன்றை பிடித்து கவ்வி சென் றது. சத்தம் கேட்கவே வெளியில் வந்து பார்த்தபோது, சிறுத்தை சேவலை கவ்வி சென்றதைக்கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இதன்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான  காட்சிகளை பார்த்த போது, சுமார் 3 வயது மதிக்கதக்க பெண்  சிறுத்தை ஒன்று, உணவு தேடி அலைவதும், மெதுவாக வீட்டின் முற்றத்தின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த சேவல் களில் ஒன்றை பிடித்து கவ்வி செல்வதும் தெரிய வந்தது. இவரது வீட்டில் கடந்தாண்டு ஒரு நாயையும், 3 மாதத் திற்கு முன்பு ஒரு கோழியையும் சிறுத்தை வேட்டையாடி சென் றுள்ளது. இச்சம்பவம் விநாயகம் குடும்பத்ததினர் மட்டு மின்றி அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, பாலக்கோடு வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்கா ணித்து, அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகு திக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலா வந்த சிறுத்தை கோவை மாவட்டம்,போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட் பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியே றிய சிறுத்தை ஒன்று குப்பேபாளையம் வன எல்லையில் உலா வந்தது. ஆனால் அப்பகுதியில் சோலார் மின் வேலி  அமைக்கப்பட்டு இருந்ததால், சிறுத்தை ஊருக்குள் வர  முடியாமல் அங்கும் இங்கும் உலா வந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.  இந்நிலையில், வன எல்லையில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டின் அருகே உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.