tamilnadu

img

கோவையில் தனியார் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து!

கோவை சின்னவேடம்பட்டி அருகே தனியார் பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் மரப் சாமான்கள் தீயில் எரிந்து நாசமானது. 
கோவை சின்னவேடம்பட்டி சுப்பநாயக்கன்புதூர் பகுதியில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் மூக்கையன் (53) என்பவர் பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.  இன்று காலை வழக்கம் போல் குடோனில் வட மாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது குடோனின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறி நிலையில், அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பஞ்சு மற்றும் மர சாமான்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.