வன விலங்குகளால் பாதிப்பு: விவசாயிகள் தர்ணா போராட்டம்
மேட்டுப்பாளையம், ஏப்.25- காட்டை விட்டு வெளியேறும் வன விலங்குகளால் ஏற் படும் பாதிப்புகளை தடுக்கவில்லை என குற்றச்சாட்டி மேட் டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத் திற்குட்பட்ட பகுதிகளான தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உள் ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்க ளில் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக் குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து பலமுறை விவசாயிகள் தரப்பில் வனத்துறை அதிகாரி களிடம் முறையிட்டும் பயிர்களை சேதப்படுத்தும் யானை களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து வியாழனன்று விவசாயி கள் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலக வளாகத் தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் போராட்டம் நடத்திய நிலையில், வனவிலங் குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடுதல் ஆட் களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்ற னர்.