tamilnadu

img

விவசாயிகள் சங்கத்தினர் சேலம் முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் சேலம் முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம்

ங்ககிரி அருகே விளை நிலம் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு  தெரிவித்து தொடர் மறியலில் ஈடு பட்டு வரும் விவசாயிகள், பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், அரசிராமணி பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப் பைக்கழிவுகளை, ஏற்கனவே கொட் டிய இடத்தை விட்டுவிட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குறுக்குப் பாறையூரில் கொண்டு வந்து கொட் டினர். விவசாயத்தையும், பொது மக்களையும் பாதிக்கிற காரணத்தி னால், பாதிக்கப்படும் விவசாயிக ளும், பொதுமக்களும் குப்பைக் கொட்டும் வாகனங்களை சிறைப் பிடித்தல், மறியல், அரசு அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், முற் றுகை போன்ற பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்கள் குப்பை கொட்டுவதோ, சுற்றுச்சுவர் கட்டுவதோ உள்ளிட்ட பணிகள்  நடைபெறவில்லை. தற்போது, மீண் டும் அப்பணிகள் தொடங்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில், 35  ஆவது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகி றது. இதற்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என். ஜெயவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் எஸ்.முத்துசாமி, கே.நடராஜன், மு.பெரியண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கொங்கணாபுரம் ஒன்றி யச் செயலாளர் எஸ்.வெங்கடேஷ் நன்றி கூறினார். இதேபோன்று, சேலம் முழுவ தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட் டத் தலைவர் ஏ.அன்பழகன், துணைச் செயலாளர்கள் எம்.ராமசாமி, ஆர். ராஜேந்திரன், துணைத்தலைவர் பி. தங்கவேலு, நிர்வாகிகள் என்.ஈஸ் வரன், இல.கலைமணி, சரவணன், வெங்கடேஷ், ஜெயவேல், பால் உற் பத்தியாளர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.அரியாக்கவுண்டர், மாவட் டத் தலைவர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.