ஆபத்தான தடுப்புச் சுவர்களை அகற்ற கோரிக்கை!
திருச்செங்கோட்டில், சாலை நடுவே உள்ள ஆபத்தான தடுப்புச் சுவர்களை அகற்றி, தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களை தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்தின்போது சாலை யின் மத்தியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர்கள் (சிமெண்ட் கற்கள்) தற்போது அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்த லாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி இந்த தடுப்புச் சுவர்களில் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில வாரங்களாக, வாரத்திற்கு ஒரு விபத்து என்ற அளவில் விபத்துக்கள் அதி கரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தடுப்புச் சுவர்களில் சாலை பாதுகாப்பு சம்பந்த மான ஒளிரும் பட்டைகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புச் சுவர்களை சரியாக கவனிக்க முடியா மல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டி கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரி விக்கின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் மத்தியில் உள்ள இந்த ஆபத்தான சிமெண்ட் கற்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எலச்சிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ள னர்.