tamilnadu

img

சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி இரண்டு வாரத்திற்குள் பட்டா வழங்க உறுதி

சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி இரண்டு வாரத்திற்குள் பட்டா வழங்க உறுதி

தருமபுரி, மே 12- பாலக்கோடு - காரிமங்கலம் வட் டத்தில் உள்ள மக்களுக்கு மனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு வாரத்திற்குள் பட்டா  வழங்க அதிகாரிகள் உறுதியளித்த னர். தருமபுரி மாவட்டம் பாலக் கோடு காரிமங்கலம் வட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் சிறு, குறு விவ சாயிகளாக உள்ளனர். பெரும் பகுதி மக்கள் தினக்கூலிகளாக உள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகாலம் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும், கிராம நத்தம் மேய்ச்சல் புறம்போக்கு கோயில் மானிய நிலங்களை அனுபவம் செய்தும்  வீடு கட்டி குடியிருந்து வருகின்ற னர். குறிப்பாக பாலக்கோடு வட் டம் குழிககாடு, ஜிட்டாணட அள்ளி, சூடப்பட்டி மாரணட அள்ளி,  பாளையம், பஞ்சப் பள்ளி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் மனைப் பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள னர். அதே போன்று சூடப்பட்டி, கேத்தன அள்ளி, கொத்தடிமை காலனி, பெரியாமபட்டி, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகாலமாக வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். குடியிருப் பதற்கான வீட்டு வரி, குடிநீர் கட் டணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவ ணங்கள் வைத்திருக்கும் சூழலில்  பலமுறை வட்டாட்சியர் அலுவல கத்திலும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் பாலக்கோடு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  திங்களன்று காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். வட்டச் செயலா ளர் பி.காரல்மார்க்ஸ் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன், மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், வட்டக் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இதுகுறித்து மாநில செயற்குழு  உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகை யில், பாலக்கோடு வட்டத்தில் மனு  கொடுத்தும் பட்டா வழங்காத சூழ் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு  போராட்டம் நடத்த முடிவெடுத் தோம். ஆனால், போக்குவ ரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தும் என கருதி, காவல்துறை அனு மதி மறுத்து நோட்டீஸ் வழங்கு கிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சட் டம், பாலக்கோடு காவல்நிலையத் திற்கு ஒரு சட்டமா. இந்த போராட் டத்தை நடத்த தூண்டியது பாலக் கோடு வட்டாட்சியர் தான், கொடுத்த மனுவின் மீது பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நிலங்க ளில் வீடுகட்டி சாகுபடி செய்து வரு கின்றனர். நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களையும் விவசாயம் செய்து வருபவர்களையும் நிலத் தில் இருந்து வெளியேற்றக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேய்ச்சல் புறம்போக்கு, நீர் நிலைகளில் புறம்போக்கு இடங் களில் குடியிருப்பவர்கள் விவ சாய சாகுபடி செய்தவர்களின் நிலத்தை ஆய்வு செய்ய வேண் டும். நீர்நிலை இல்லை, மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க  வேண்டும். ஏற்கனவே விவசாயி கள் கடன் வாங்கி கடனை கட்ட முடி யாத சூழல் உள்ளது. பெண்கள் மைக்ரோ பைனான்ஸில் கடன் வாங்கி கட்ட முடியாத சூழல் உள் ளது. இந்நிலையில், தான் இந்த மக்கள்‌ மனைபட்டா கேட்டு காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தீர்வு கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் போராட்டம் தொடரும் என் றார்.  

இரண்டு வராத்திற்க்குள் மனைபட்டா  

இதனிடையே, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் களிடம் பாலக்கோடு வட்டாட்சியர்  அலுவலகத்தில் வட்டாட்சியர் வே. ரஜினி பேச்சு வார்த்தையில் ஈடு பட்டார். அப்போது ஏற்கனவே 1365 மனு கொடுத்த மக்களுக்கும் திங்க ளன்று வழங்கிய 300 க்கும் மேற் பட்ட மனு என மொத்தம் 1665  மனுக்களுக்கு இரண்டு வாரத்திற் குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைவர்களிடம்  பாலக் கோடு வட்டாட்சியர் வே.ரஜினி உறு தியளித்தார்.