tamilnadu

img

கொரோனோ தொற்று: கோவையில் சிபிசிஐடி அலுவலகம் மூடல்

கோவை, ஆக.17- இலங்கை கடத்தலாளி அங்கட லொக்கா மரண வழக்கை விசாரித்து வரும்  மேலும் ஒரு சிபிசிஐடி ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பியின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலாளி அங்கட லொக்கா மரண வழக்கு தொடர்பாக கோவை  சிபிசிஐடி போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கோவை சிபிசிஐடி அலுவல கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவ ருக்குக் கடந்த 15 ஆம் தேதியன்று கொரோனா  தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து  சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அங்கு பணியாற்றி வந்த 30க்கும் மேற்பட்ட போலீ சார் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது.  இதில், அங்கட லொக்க  வழக்கை விசாரித்து வந்த  சிபிசிஐடி ஆய்வாளர் மற்றும்  டி.எஸ்.பி.யின் வாகன ஓட்டு நர் ஆகியோருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிக் கப்பட்ட இருவரும் சிகிச்சைக் காக கோவை இ.எஸ்.ஐ மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கோவை  சிபிசிஐடி அலுவலகத்தில் தொற்று பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந் துள்ளது. மேலும், விசாரணை அதிகாரி யான டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கை  போதைப் பொருள் கடத்தலாளி அங்கட  லொக்கா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.