கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்ததாக புகார்
நாமக்கல் ஏப். 26 – கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்ததாக குமாரபாளை யத்தில் விசைத்தறி உரி மையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. குமாரபாளையம் காமராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் முரு கன் (49). இவர் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர். இவர் கைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டிய ஜவுளி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்வதாக, உதவி அமலாக்க அலு வலர் விஜயராணிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நேரில் ஆய்வு செய்த அதிகாரி விஜயராணி, கைத்தறியில் உற் பத்தி செய்ய வேண்டிய ஜவுளி ரகங்களை, விசைத்தறி யில் உற்பத்தி செய்வது உறுதியானது. இது குறித்து குமார பாளையம் போலீசில் விஜயராணி, விதி மீறி ஜவுளி உற் பத்தி செய்த முருகன் மீது புகார் அளித்தார். இதனை யடுத்து, குமாரபாளையம் காவல்துறையினர் முருகனை கைது செய்ய நேரில் சென்ற போது அவர் தலைமறைவா னது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவான முரு கனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 20க்கு தள்ளிவைப்பு
உதகை, ஏப். 26 – கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை ஜூன் 20க்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தள்ளி வைத்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படைகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறு விசாரணை நடத்தினர். பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணை யர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்க ளுக்கு பல்வேறு கட்டங்களாக சம்மன் அனுப்பப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உதகை ஒருங் கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சனியன்று வழக்கு விசா ரணைக்கு வந்தது. சனியன்று விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டோர் யாரும் ஆஜராகவில்லை. சிபிசிஐடி தரப் பில் கூடுதல் துணை ஆணையர் முருகவேல் மற்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகி யோர் ஆஜராகினர். அப்போது, எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜ யன், கொலை மற்றும் கொள்ளை நடந்த கொடநாடு எஸ்டேட் சம்பவ இடத்தை நீதிமன்ற கவுன்சில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி லிங்கம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அணைகள் நிலவரம்
பவானிசாகர் அணை
நீர்மட்டம்:71.23/105அடி
நீர்வரத்து:473 கனஅடி
நீர்திறப்பு:2950 கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:40.70/72 அடி
நீர்வரத்து:74கனஅடி
நீர்திறப்பு:1085கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:67.35/120அடி
நீர்வரத்து:343கனஅடி
நீர்திறப்பு:71கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:40.77/60அடி
நீர்வரத்து:811கனஅடி
நீர்திறப்பு:1226கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 48.17/90அடி
நீர்வரத்து:21கனஅடி
நீர்திறப்பு:38கனஅடி