tamilnadu

img

மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு

மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம்

உலக மாமேதை காரல் மார்க்ஸின் 142 ஆவது நினைவு தினம் வெள்ளி யன்று அனுசரிக்கப்பட்டது. உழைப்பாளி மக்களின் விடி வெள்ளி, மாமேதை காரல் மார்க்ஸின்  142 ஆவது நினைவு தினம் வெள்ளி யன்று உலகம் முழுவதும் அனுசரிக் கப்பட்டது. அதன்ஒருபகுதியாக, மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகி கள் நினைவகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித் தும், செங்கொடியை ஏற்றி வைத்தும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு, கட்சியின் மாவட்டக்குழு அலுவலக செயலாளர் பி.சந்திரன் தலைமை வகித்தார். காரல் மார்க்ஸ் சிலைக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மாலை அணிவித்து சிறப்புரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து செங்கொ டியை மூத்த தோழர் ஆர்.வெங்கட பதி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் கிழக்கு மாநகரச் செயலா ளர் பச்சமுத்து, மேற்கு செயலாளர் கணேசன், வடக்கு செயலாளர் பிரவீன் குமார், மாவட்ட அமைப்புக்குழு உறுப் பினர் பவித்ரன், வரலாற்று சங்க நிர்வாகி பர்னபாஸ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி செங்கொடிபுரத்தில் நடை பெற்ற கொடியேற்று விழாவிற்கு நகரச்  செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் செங்கொடியை ஏற்றி வைத் தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. என்.மல்லையன், எஸ்.கிரைஸாமேரி, கே.பூபதி உட்பட பலர் கலந்து கொண் டனர். அரூரில் மாமேதை மார்க்ஸ் உரு வப்படத்திற்கு மாலை வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்ற னர். பாலக்கோடு பேருந்து நிலையத் தில் நடைபெற்ற நிகழ்வில், மூத்த தலை வர் ஜி.நக்கீரன் செங்கொடியை ஏற்றி  வைத்தார். வட்டச் செயலாளர் பி.காரல்  மார்க்ஸ் உரையாற்றினார். பாப்பிரெட் டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்விற்கு,  மூத்த தலைவர் டி.சேகர் தலைமை வகித் தார். மூத்த தலைவர் தீர்த்தகிரி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, வட்டச் செய லாளர் செயலாளர் தி.வ.தனுஷன் ஆகி யோர் பங்கேற்றனர். தருமபுரி ஒன்றியத் தில் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்த சாமி, நல்லம்பள்ளியில் ஒன்றியச் செய லாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், இண்டூரில் பகுதிச் செயலாளர் சேகர், மொரப்பூ ரில் ஒன்றியச் செயலாளர் கே.தங்க ராஜ் ஆகியோர் தலைமையில் கொடி யேற்று விழா நடைபெற்றது. இதே போன்று, பென்னாகரம் நகரத்தில் நக ரச் செயலாளர் செல்வம், மேற்கு ஒன் றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக்தி வேல், ஏரியூயூரில் ஒன்றியச் செயலாளர் தங்கராசு, பாப்பாரப்பட்டியில் பகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில், மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  

கோவை

கோவை மேற்கு மாநகரம், சுந்தரம் வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ராதிகா, நகரச் செயலாளர் பி.சி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காம ராஜபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச் சியில், சிபிஎம் கோவை நாடாளுமன்ற  முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் செங்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர், கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ் ஆகி யோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.குளம் கிழக்கு கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ் வில், சிபிஎம் சட்டமன்ற முன்னாள் உறுப் பினர் யு.கே.வெள்ளிங்கிரி சிறப்புரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் வெங் ளிங்கிரி உட்பட பலர் கலந்து கொண்ட னர். சிங்காநல்லூர், வி.ஆர்.புரம் பகுதி யில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுரேஷ், நக ரச் செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். பொள்ளாச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. ஆர்.பழனிச்சாமி, தாலுகாச் செயலா ளர் மூ.அன்பரசன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரம சிவம் ஆகியோர் பங்கேற்றனர். அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில், கோவை நீதிமன்ற நுழைவாயிலில் நடைபெற்ற மார்க்ஸின் நினைவு தின நிகழ்விற்கு, வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார் தலைமை வகித்தார். மூத்த வழக்கறி ஞர்கள் பா.பா.மோகன், ச.பாலமுரு கன், ராதாகிருட்டிணன், வேலுசாமி, கோபால்சங்கர், மாசேதுங் உட்பட பலர்  கலந்து கொண்டனர். கோவை வடக்கு நகர கமிட்டி, பாரதி நகர் பகுதியில் நடை பெற்ற நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நக ரச் செயலாளர் நாராயணசாமி, மாவட் டக்குழு உறுப்பினர் தங்கமணி ஆகி யோர் பங்கேற்றனர். பேரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், நகரச் செயலா ளர் ஜி.சாந்தாராம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.மலையரசி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோன்று, கோவை மாவட்டத் தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்ஸ் நினைவுநாள் மற்றும் அகில இந்திய மாநாட்டு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்விற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி கொடி யேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் சிறப்பு ரையாற்றினார். முடிவில், மாவட்டக் குழு உறுப்பினர் வி.பாண்டியன் நன்றி கூறினார்.