tamilnadu

விசைத்தறி கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களையும் அழைக்க சிஐடியு வலியுறுத்தல்

விசைத்தறி கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை  தொழிற்சங்கங்களையும் அழைக்க சிஐடியு வலியுறுத்தல்

கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் விசைத்தறி நெசவுக் கூலி உயர்வு தொடர்பாக நடத்தும் பேச்சுவார்த்தையில் தொழிற்சங் கப் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று சிஐடியு விசைத் தறித் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு விசைத் தறித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முத்துசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: கடந்த 2022 ஆம்  ஆண்டு விசைத்தறி உரிமையாளர் களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்க ளுக்கும் இடையே ஏற்பட்ட நெச வுக் கூலி ஒப்பந்தம் முறையாக அமல் படுத்தப்படவில்லை. இதனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்க கூட்ட மைப்பு பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காததால், கடந்த 19 ஆம் தேதி முதல் கால வரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோமனூர், கண்ணம்பாளை யம், தெக்கலூர், அவிநாசி, புதுப்பா ளையம் மற்றும் பல்லடம் வட்டா ரத்தில் ஏறத்தாழ 80% விசைத் தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில், வரும் 25 ஆம் தேதி  கோவை மாவட்ட ஆட்சியர் தலை மையில் விசைத்தறி உரிமையா ளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி யாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினருடன் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்த வுள்ளார். விசைத்தறித் தொழிலாளர்க ளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வை வழங்க வேண்டும். இத்தொழிலில் ஈடுபட் டுள்ள லட்சக்கணக்கான தொழிலா ளர்களுக்கும் கூலி உயர்வு வழங்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, மாவட்ட நிர்வாகங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து விசைத்தறி தொழிற்சங்கங்களின் கூட்டம் அவிநாசியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரி வித்துள்ளார்.