tamilnadu

img

விசைத்தறி ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி யை ரத்து செய்திடுக

விசைத்தறி ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி யை ரத்து செய்திடுக

விசைத்தறி தொழிலாளர் சங்கம் தீர்மானம்

சேலம், ஜூன் 16 – விசைத்தறியில் உற்பத்தி செய்யப்ப டும் ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என  சேலம் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் பேரவை கூட்டம் வலியு றுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி சிஐடியூ  அலுவலகத்தில் விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் ஆண்டு பேரவை ஞாயி றன்று மாவட்டத்தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் வெங்கட பதி தொடங்கி வைத்துப் பேசினார். செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வெங் கடேஷ் வரவு-செலவு அறிக்கையை யும் முன்மொழிந்தனர். சிஐடியு மாவட் டப் பொருளாளர் இளங்கோ வாழ்த்தி பேசினார்.  இதில், நலிவடைந்து வரும் விசைத் தறி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். ஜெட் லூம் மற்றும் ஆட்டோ லூம் தறிகளுக்கு வழங்கி வந்த  இலவச மின்சார ரத்து முடிவைக் கைவிட்டு, மீண்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து விசைத் தறி தொழிலாளர்களுக்கும் ஜவுளி உற் பத்தியாளர்களால் போனஸ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.  இடங்கணசாலை மாட்டையாம் பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணி என்பவரின் தற் கொலைக்குக் காரணமான ராசிபுரம் வெரிடாஸ் தனியார் நிதி நிறுவன குண் டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. சேலம் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கத்திற்கு, சுப்பிரமணி தலைவராகவும், வீராசாமி செயலாள ராகவும், ராமச்சந்திரன் பொருளாளராக வும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் கோவிந்தன் பேரவையை நிறைவு செய்து உரையாற்றினார். முடி வில் சுப்பிரமணி நன்றி கூறினார். நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் காவேரி ஆர்எஸ் பகுதியில் சிஐ டியு தொழிற்சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் 20 ஆவது மகாசபை,  ஒன்றியத் தலைவர் அசன் தலைமையில் ஞாயிறு்று நடை பெற்றது . இதில், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோ கன், மாவட்டத் தலைவர் கே.மோகன் ஆகியோர் உரையாற்றினர். இதில், விசைத்தறி தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்கு 75 சதவீதம் கூலி  உயர்வு வழங்க வேண்டும். கூலி  உயர்வுடன் இரவு பணி மேற்கொள் ளும் தொழிலாளர்களுக்கு டீ, பன்  வழங்க வேண்டும். தொழிற்சாலைக ளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஓவர் டைம் செய்யும் தொழி லாளர்களுக்கு தனி ஊதியம், மருத் துவ வசதி ,இஎஸ்ஐ மற்றும் ஒன்பது  தேசிய விடுமுறை நாட்களில் சம்பளத் துடன் கூடிய விடுமுறை வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.  சங்கத்தின் தலைவராக முத்துக் குமார், செயலாளராக குமார், பொரு ளாளராக முருகேசன் மற்றும் 24 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.