tamilnadu

img

“நடந்தது போதும், வேண்டும் பேருந்து”

“நடந்தது போதும், வேண்டும் பேருந்து”

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

“நடந்தது போதும், வேண்டும் பேருந்து” என்ற தலைப்பில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், பேருந்து வசதி கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், நஞ்சேகவுண்டன் புதூர், உடையாம்பாளையம், உருமாண்டம் பாளையம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகு திகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல் லூரி மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு  இங்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் உள் ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ள னர். நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து ஒரு சொகுசு பேருந்து மட்டும் இயக்கப்பட்டா லும், அது முறையான நேரத்தில் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நி லையில், வாலிபர் சங்கத்தினர், “நடந்தது போதும், வேண்டும் பேருந்து” என்ற தலைப் பில், நஞ்சேகவுண்டன்புதூரில் திங்களன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மனோஜ் தலைமை வகித் தார். ஒன்றியப் பொருளாளர் வி.சுரேஷ்குமார் வரவேற்றார். மாமன்ற உறுப்பினர் என்.சுமதி, முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகிகள் ரமேஷ், எஸ்.துரைசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா,  ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்து முருகன், ஒன் றியக்குழு உறுப்பினர் என்.சரவணகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றி யக்குழு உறுப்பினர் ஜெகன் நன்றி கூறினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் கீதாஞ்சலி,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.