tamilnadu

img

கார் மோதியதில் இளைஞர் பலி

அவிநாசி, மே 23, அவிநாசி அருகே கார் மோதிய விபத்தில் இளை ஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவினாசிரய அடுத்த கருவலூர் தெற்குரத வீதி பகு தியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஜீவானந்தம்(29). இவர் வியாழனன்று இரவு, இருசக்கர வாகனத்தில் கரு வலூரில் இருந்து அன்னூர் சாலை நோக்கி சென்றுள்ளார். அப்போது அவிநாசி அருகே வேட்டுவபாளையம் பகுதி யைச் சேர்ந்த சுப்பிரமணி (70) என்பவர் அன்னூரில் இருந்து கருவலூர் நோக்கி அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இவரின் கார்  எதிரே வந்த  ஜீவானந்தத்தின் இரு சக்கர வாகனம் மீது மோதியதில், பள்ளத்தில் தூக்கிவீசப் பட்டார். இதில் பலத்த காயமடைந்த ஜீவானந்தம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனைதொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய சுப்பிர மணியம் அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். அதற் கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து அவி நாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுப்பிரமணியைத் தேடி வருகின்றனர்.