tamilnadu

img

குடும்பத்தினரோடு காத்திருப்பு போராட்டம்

தாராபுரம், மே 10 -தாராபுரத்தில், சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மே 28 தேதியன்று நடைபெறும் போராட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்வதென என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் தாராபுரம் கோட்ட பொதுக்குழு கூட்டம் முருகன் காவடி சங்க மண்டபத்தில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் தில்லையப்பன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உரையாற்றினார்.இக்கூட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்கவேண்டும். நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து மாதந்திர ஊதியம் வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பணிகளை தனியாருக்கு வழங்காமல் அரசே ஏற்று நடத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மே 28ந் தேதியன்று சென்னை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட தாராபுரம், மூலனூர், வெள்ளகோயில், மடத்துக்குளம், உடுமலையில் உள்ள அனைத்து சாலைப்பணியாளர்களும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக கோட்டப் பொருளாளர் முருகசாமி நன்றி தெரிவித்தார்.