தொல்லியல் சின்னங்களை பாதுகாத்திடுக - ஜமாபந்தியில் மனு
உடுமலை, ஜுன் 27- தொல்லியல் சின்னங்களைப் பாது காக்க வலியுறுத்தி ஜமாபந்தியில், உடு மலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வியாழனன்று மனு அளித்தனர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில், பத்து நாட்களாக ஜமாபந்தி நடை பெற்று வருகிறது. வியாழனன்று நடை பெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலரும், துணை ஆட்சி யருமான அய்யா அ.சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். இதில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் அளிக் கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலைக்கு உட்பட்ட கொங்கல் நகரம், கடத்தூர், கொழுமம், கல்லாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொல்லியல் சின்னங்கள் சிதிலமடைந்துள்ளது. மேலும் இங்குள்ள சிற்பங்கள் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது. எனவே தொல்லியல் துறையின் சார்பில் சிற்பங்களை பாதுகாக்கவும், தொல்லியல் சின்னங்கள் குறித்து பெயர் பலகை வைக்கப்பட வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் துணை ஆட்சியர் அய்யா அ.சாகுல் ஹமீதுக்கு நினைவு பரிசு வழங் கப்பட்டது.
கருவலூரில் குடிநீர் குழாய் உடைப்பு
அவிநாசி, ஜூன் 27- அவிநாசி அடுத்த கருவலூர் ஊராட்சி அன்னூர் மெயின் ரோடு செல்லும் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாததால் குடிநீர் வீணாகி வருகிறது. கோடை காலம் என்பதால் குடிநீர் பற் றாக்குறை ஏற்பட்டு மக்கள் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சி யில் அன்னூர் செல்லும் சாலை அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாள்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குடிநீருடன் சாக்கடை நீர் கலங்குகின்றது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தபால் ஆயுள் காப்பீடு: பிரீமியம் வசூலில் திருப்பூருக்கு மூன்றாமிடம்
திருப்பூர், ஜூன் 27 - கிராம தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் அதிக பிரீமியம் தொகை வசூலித் ததற்காக, மாநில அளவில், கும்பகோணம் தபால் கோட்டத்துக்கு, முதல் இடத் திற்கான விருது வழங் கப்பட்டது. மயிலாடுதுறை இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறுகையில், ‘திருப்பூர் கோட்டத்தில் கடந்தாண்டு 3,482 கணக்கு களில், 133 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கிராமப்புற பகுதியில் பல் வேறு சிறப்பு மேளாக்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தியதே இதற்கு முக்கிய காரணம். அடுத்தாண்டு முதலிடத்துக்கு முன்னேற தீவிர முயற்சி எடுப்போம்,’’ என்றார்.