tamilnadu

img

கல்லூரி மாணவர்களுக்கு பட்டு வளர்ச்சித்துறையில் பயிற்சி

கோவை, நவ.12- மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி யைச் சேர்ந்த பட்டுப்புழுவியல் துறை மாணவர்களுக்கு கோவையிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவல கத்தில் செவ்வாயன்று பயிற்சி வழங் கப்பட்டது.  மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக பட்டு வளர்ப்பு குறித்த 90 நாட் கள் பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. இந்த 90 நாட்களில் மாண வர்கள் விவசாயிகளுடன் தங்கி பட்டு வளர்ப்பு முறைகளை கற்றுக் கொள்ளுதல், பட்டு விவசாயிகளுக்கு அரசு வழங்கி வரும் சேவைகள் மற்றும் பட்டு வளர்ச்சித்துறையின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வர். அதன்படி, கோவை பாலசுந்த ரம் சாலையில் இயங்கி வரும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப் பட்டது. இவ்வளாகத்தில் இயங்கி வரும் பட்டுக்கூடு அங்காடியின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் ஏலம்  விடும் முறைகள் குறித்து அங்காடி யின் உதவி பட்டு ஆய்வாளர் சரவ ணன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து பட்டு  வளர்ச்சித் துறையின் செயல்பாடு கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும்மானியங்கள் குறித்து பட்டு வளர்ச்சித் துறையின் மாவட்ட கண் காணிப்பாளர் அருள்குமார் மற்றும்  தொழில்நுட்ப உதவியாளர் சாந்தினி ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.