கோவை, செப்.4- சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவேன் என மிரட்டி 17 வயது சிறுமியை தாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். கோவையை அடுத்த மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20). இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் தனது உறவுக்கார சிறுமியிடம் (17) முறைகேடாக நடந்து கொண்டதுடன், அவரை சுவரில் மோதி தாக்கி யுள்ளார். இதனால் சிறுமி மயக்கமடைந்துள்ளார். மயங்கிய நிலையில் சிறுமி கிடப்பதை கண்ட அவரது உறவினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சிறுமி யிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது, தமிழ்செல் வன் தன்னை காதலிக்கக் கூறி நிர்பந்தித்ததாகவும், இல்லை யென்றால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவி டுவேன் எனக்கூறி தன்னை தாக்கியதாகவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீசார், தமிழ் செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.