tamilnadu

img

சேலம் அருகே கோவில் சிலைகள் மாயம்

சேலம், மே 18-சேலம் அருகே கோவில் இருந்த இரண்டு சிலைகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் அருகே உள்ள உடையாபட்டியில் அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் தற்போது புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கோவிலில் இருந்த சுப்பிரமணியசாமி கற்சிலை ஒன்றும், அம்மன் கற்சிலை ஒன்றும் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும் திருத்தொண்டர்கள் சபை நிறுவன ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேலம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவன ராதாகிருஷ்ணன் கூறுகையில், மிகப் பழமையான இந்த கோவிலில் இருந்த சுப்பிரமணிய சாமி கற்சிலை ஒன்றும், அம்மன்கற்சிலை ஒன்றும் மாயமாகி இருக்கிறது. இந்த இரண்டு சிலைகளும் பல லட்சம் ரூபாய் மதிப்புமிக்கதாகும். ஆகவேஇந்த இரண்டு சிலைகளை கண்டுபிடித்து மீண்டும் கோவிலில் நிறுவ இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.