கோவை, மார்ச் 7– தொழில் கேந்திரமான கோவை மாவட்டத்தின் மாண்பை குலைக்க மத அடிப்படைவாதிகள் அழைப்பு விடுத்த கடையடைப்பு போராட்டத்தின் காரணமாக கோவையின் இயல்பு நிலை சனி யன்று பெரும் பாதிப்புக்குள்ளாகி யது. இந்து முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் ஆனந்த் மூன்று தினங்களுக்கு முன்பு அடை யாளம் தெரியாத நபர்களால் தாக் கப்பட்டார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனை யில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் சனி யன்று கோவையில் கடைய டைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல், கோவை கணபதி வேதம் பால் நகரிலுள்ள பள்ளிவா சல் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற னர். மேலும், கோவை அரசு மருத்து வமனை அருகே ஆட்டோ ஓட்டு நர் முகமது கனி என்பவர் தாக்கப் பட்டதை கண்டித்து, இஸ்லாமிய அமைப்புகளும் சனியன்று கடை யடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதேநேரம், பொருளாதார மையம் மற்றும் தொழில் கேந்தி ரமான கோவை மாவட்டத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கக் கூடாது, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு கடையடைப்பு போராட் டத்தை தடுக்க வேண்டும் என கோவை மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் ஓரணி யில் திரண்டன. இந்த அணியி னர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடுப்பு நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வரையில் சென்று முயற்சியை மேற்கொண்டனர். இருப்பினும், அவரவர் பலத்தை காட்ட வேண்டும் என்கிற நோக்கில் மத அடிப்படைவாதிகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தியே தீர்வோம் என்ற எண் ணத்துடன் செயல்பட்டன. இதன் உச்சமாக சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிர்வாகி இறந்து விட்டார். ஆகவே, கடையடைக்க வேண்டும் என்கிற பொய்ப் பிரச் சாரத்தை ஒரு தரப்பினர் தீவிர மாக மேற்கொண்டனர். இதன்கார ணமாக, வியாபாரிகள் பொருளா தார சேதத்தை தவிர்க்க வேண் டும் என்கிற அச்சத்தின் காரண மாக கோவை மாநகரத்தில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட் டது. ஆனால், பேருந்துகள் வழக் கம் போல் இயங்கியது. கடையை அடைக்கச் சொல்லி யாராவது வற் புறுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்திரவிட்டிருந்தார். இருப்பி னும் சில பகுதிகளில் காவல்துறை யினரே கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை வற்பு றுத்தி கடைகளை அடைக்கச் செய்த சம்பவங்களும் அரங்கேறி யது. இத்தகைய நடவடிக்கைகளி னால் சனியன்று கோவையின் இயல்பு நிலை வெகுவாக பாதித் தது.