தருமபுரி, டிச. 15- தருமபுரியில் கருங்கல் கடத்திய டிராக்டர் ஞாயி றன்று பறிமுதல் செய்யப் பட்டது. தருமபுரி அடுத்த தேவ ரசம்பட்டி பகுதி வழியாக கருங்கற்கள் ஏற்றிய இரண்டு டிராக்டர்கள் சென் றது. அப்போது அந்த வழி யாக சென்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி டிராக்டர்களை நிறுத்தி விசாரித்த போது, அனுமதியின்றி கருங் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, டிராக்டர்களை பறி முதல் செய்ய நல்லம்பள்ளி வட்டாட்சி யர் சரவணனுக்கு ஆட்சியர் உத்தரவிட் டார். இதனைத் தொடர்ந்து டிராக்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.