tamilnadu

img

பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சம்

சேலம், செப்.22- வேம்படிதாளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆங்காங்கே உடைந்த நிலையில் எந்நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.                        சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், வேம்படி தாளம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட திருவளிப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காக்காபாளையம் ஏரி அருகே கட்டப்பட்டன. அதில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பல இடங்களில் கரைகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட் டுள்ளது.  இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவ்விடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட  மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் இதுவரை  புதிய தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. மேலும் பழுதடைந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் தொட்டி எந்நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.