tamilnadu

img

சோவல் தொழிற்சாலையில் பிரச்சனை

விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

அவிநாசி, மே 21-திருப்பெரும்புதூர் சோவல்தொழிற்சாலையில் இயந்திரங்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகளை உடனே விடுதலை செய்திட வேண்டும் எனவிசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலநிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று அவிநாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த மண்ணூரில் செயல்பட்டு வரும் சோவல் தொழிற்சாலையில் இயந்திரங்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததொழிலாளர்கள் மற்றும் சிஐடியுமாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் இ.முத்துகுமார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இவர்களைஉடனடியாக விடுதலை செய்திடவேண்டும். இத்தொழிற்சாலை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகஅரசுமுன் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட்டதால் 5 ஆயிரம்தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதேபோல், நாமக்கல்மாவட்டம், பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலுவைத் தொகையை பல்வேறுநிறுவனங்கள் இன்னும் வழங்காமல் உள்ளது. எனவே, விசைத்தறிஉரிமையாளர்கள் உடனடியாக காலம் கடத்தாமல் அத்தொகையை வழங்க வேண்டும். இதேபோல், தொழிற்சங்களுடன் செய்து கொண்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்தாமல் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை விசைத்தறி சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, கூலி உயர்வை உடனடியாக அமல்படுத்திட தமிழக தொழிலாளர் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் துறை, வருவாய்த்துறை உரிய முறையில் தலையிடாமல் காலம் கடத்துவது தொழிலாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, நாமக்கல் மாவட்ட அரசு நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு கூலி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனகூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.