கோவை மாநகராட்சியின் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
கோவை, ஆக.28 – தனியார் நிறுவனங்கள், தனி யார் அலுவலகங்கள், கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதனை தனியார் மருத்து வமனை மற்றும் ஆய்வகங்களில் தங்களது சொந்த செலவில் செய்ய வேண்டுமென்ற கோவை மாநக ராட்சியின் அறிவிப்பிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலா ளர் வி.இராமமூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், கடை களில் பணிபுரியும் பணியாளர் களுக்க கட்டாயம் கொரோனா பரி சோதனை செய்து, பதிவேடு பரா மரிக்க வேண்டும். இல்லையென் றால் கடைகள், நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து கோவை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் விநியோகித்து வருகிறது. இதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டா யம் செய்யப்பட வேண்டும் என்கிற மாநகராட்சியின் அறிவிப்பு வர வேற்கத்தக்கது. அதே நேரத்தில் கடந்த ஆறு மாதகாலமாக கொரோனா நோய்த்தொற்றால், தனியார் நிறுவனங்கள் வேலை யிழந்து, வருமானம் இழந்து, வியா பாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பணியாளர்களுக்கு ஊதியம் தர முடியாமல் திணறி வருகின்றனர்.
ரிசோதனைக்கான செலவை சம் பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்கிற கோவை மாந கராட்சியின் அறிவிப்பு ஏற்கக் கூடியதல்ல. ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாநில அரசு ரூ.4 ஆயிரத்து 500 என தீர்மானித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் பணி யாற்றுபவர்களில் குறைந்தது 5க்கும் மேற்பட்டவர்களுக்கு பரி சோதனை செய்வதென்றால் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். அது வும் 10 தினங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும் என்றால், ஏற்க னவே கடும் நெருக்கடியில் உள்ள நிறுவனங்கள் இந்த செலவை எதிர்கொள்ள முடியாமல் நிறுவ னத்தை இழுத்து மூடி செல்ல லாம் என்கிற முடிவிற்கே வரு வார்கள். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து, வருவாயின்றி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, கோவை மாநகர பகு திகளில் உண்மையிலே நோய் தொற்று குறைப்பது தான் மாநக ராட்சியின் நோக்கம் என்றால், மாநகர பகுதியில் மாநகராட்சி பொறுப்பில் கூடுதல் ஆய்வு மையங்களை அமைத்தும், சுகா தார கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தியும், தனியார் நிறுவன ஊழியர்கள், கடை பணியாளர்க ளுக்கு கொரோனா பரிசோத னையை அரசின் செலவிலேயே செய்திட வேண்டும். இதனை விடுத்து தனியார் மருத்துவமனை கள், ஆய்வகங்களின் பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு ஊழலுக்கும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக்குமே இட்டுச்செல் லும். மேலும், கோவையில் நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலை யில், மாநகராட்சிக்கு சொந்த மான கலையரங்கம், மாநகராட்சி மண்டபங்களில் நவீன கொரோனா மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்க முன் வர வேண்டும். இச்சூழலில் மக்கள் பொருளா தார நெருக்கடியில் சிக்கி தவிக் கும்போது தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் லாபம் ஈட்டும் வகையில் இம்மாதிரியான அறி விப்புகளை வெளியிடும் கோவை மாநகராட்சியின் செயல் வன்மை யாக கண்டிக்கதக்கது. எனவே, மாநகராட்சி நிர்வாகமே தனியார் கடைகள், நிறுவனங்கள், அலுவல கங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு அரசின் செலவிலேயே கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.