tamilnadu

img

சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பதா?

பஞ்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

நாமக்கல், செப்.27- சம்பளத்தை வழங்காத ஜெய் ஹிந்த் ஸ்பின்னிங் மில் நிர்வா கத்தைக் கண்டித்து வெள்ளியன்று  ஆலையின் முன்பு தொழிலா ளர்கள் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அருகே புதுசத்தி ரத்தில் இயங்கி வரும் ஜெய்ஹிந்த்  ஸ்பின்னிங் மில்லில் சுமார் 300  தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்த ஆலை நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக தொழிலாளர்களுக்கு முறை யாக சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், தொழிலாளர் களுக்கு உடனடியாக சம்பளம்  வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்த பிஎப் தொகையை உடனடியாக பிஎப்  அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆலை யின் முன்பு பஞ்சாலை தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) தலை மையில் வெள்ளியன்று தொழி லாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு  சங் கத்தின் கிளைத் தலைவர் கர்ணன்  தலைமை வகித்தார். கிளை செய லாளர் கனகராஜ், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாலைத் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் டி. ராமசாமி போராட்டத்தை துவக்கி  வைத்து பேசினார். மாவட்டச்  செயலாளர் எஸ்.தனபால்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர்  என்.ஜோதி வாழ்த்தி பேசி னார். சிஐடியு மாவட்ட செயலாளர்  ந.வேலுசாமி நிறைவுரையாற்றி னார். இப்போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கு. சிவராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.