அவிநாசி,மே 29 - அவிநாசி அருகே சேவூர் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பந்தம்பாளையத்தில், மாரியம்மன் கோவிலிருந்து ஆதிதிராவிடர் காலனி வரை ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையும், சேவூர் அங்காளம்மன் கோவிலிருந்து வடக்கு வீதி கோபி சாலைவரை ரூ.9 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்காக வெள்ளியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவினாசி ஒன்றிய குழு தலை வர் அ.ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, துணைத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் கவிதா அய்யாச்சாமி, சேவூர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் என்.சின்னக்கண்ணு, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பி.தங்கவேல், எஸ்.மனோகரன், ஊராட்சி செயலர் எம்.கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.