தமிழ்நாடு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் இல்ல திருமண விழா கடந்த ஞாயிறன்று அன்னூர் அருகே குமரன் குன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் மணமக்கள் கு.கண்ணன், ச.பவித்ரா ஆகியோர் தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.5 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி.முருகேசன் உள்ளிட் டோர் உடனிருக்கின்றனர். அத்துடன் சென்னை அயனாவரத்தில் உள்ள நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதி ரூ.5 ஆயிரத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் இம்மண மக்கள் வழங்கினர்.