tamilnadu

img

பெரியாரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு கோவையில் பாஜக அலுவலகம் முற்றுகை- கைது

கோவை, டிச. 24 – பாஜக டிவிட்டர் பக்கத்தில் பெரியாரை இழிவுபடுத்தி பதிவு வெளியிட்டதை கண்டித்து கோவையில் பாஜக அலுவ லகத்தை முற்றுகையிட முயன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய் யப்பட்டனர். பெரியாரின் 46 வது நினைவு தினமான செவ்வாயன்று பாஜகவின் டிவிட்டர் பக்கத் தில் பெரியாரை இழிவுபடுத்தும் வகை யில் கருத்து வெளியிட்டிருந்தனர். நாடு முழு வதும் போற்றக்கூடிய தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தன்று பாஜக தனது கொடூர குணத்தை வெளிப்படுத்திய சம்பவம் முற்போக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்ப திவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் பெரியாரை இழிவுபடுத்திய பாஜகவை கண்டித்து தபெதிக,விசிக, திராவிட தமிழர் கட்சி, தமிழர் விடியல் கட்சி ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதன்பின் காந்திபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று, சித்தாபுதூர் பகுதி யில் உள்ள கோவை மாவட்ட பாஜக அலுவ லகத்தை முற்றுகையிட முயன்றனர். குடி யுரிமை திருத்த சட்ட போராட்டங்களை திசை திருப்பும் வகையில் பெரியாரை இழிவு படுத்தி பதிவிட்டு இருப்பதாகவும், தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையிட சென்ற கு.ராமகிருட்டிணன், வெண்மணி, சுசி.கலையரசன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.