tamilnadu

img

பாலியல் வன்முறைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

அவிநாசி, மார்ச் 13- பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கருத்தரங் கம் அவிநாசியில் நடை பெற்றது. தொட்டுப் பேசுவது, பாலியல் சீண்டல், அதி காரத்தை வைத்து மிரட் டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசப் படங்களைக்காட்டுவது என பல்வேறு வகையில் பெண்கள் பணிபுரியும் இடத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டு சட்டரீதியாக போராடுவது குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் எஸ்இடிஓ அமைப்பின் சார்பில் அவிநாசியில் நடத் தப்பட்டது. இக்கருத்தரங்கில் ஆர்.மகேஸ்வரி, சிவக்குமார், எஸ்ஏடிஓ இயக்குனர் பாண்டிச்செல்வி, வழக்கறிஞர் மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்.