ஆனைமலை, ஜூன் 14- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை வனக்கிராம பகுதியில் மனித- விலங்கு மோதல்களை தடுத்திடும் விதமாக நிரந்தரமாக யானைகள் முகாம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் நவமலை மற்றும் சின்னார்பதி , அன்பு நகர், புளியகண்டி பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட் டங்கள் தற்போது அதிகரித்துள்ளன. மேலும் கடந்த மாதங்களில் 2 உயிரிழப் புகளை காட்டு யானைகள் ஏற்படுத்தி யுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தொடர் தலை யீட்டிற்குப் பின்னர் கடந்த மாதத்தில் யானையை விரட்ட கோழிகமுத்தி முகாம்களிலிருந்து இரண்டு கும்கி யானை கள் கொண்டு வரப்பபட்டன . இதற்கிடையில் இரண்டு காட்டு யானை கள் ஆழியார் ஊருக்குள் புகுந்தது மட்டு மின்றி, வனத்துறையினரையே அச்சு றுத்தி மிரள வைத்தது. இதனால் காட்டுயானை அச்சுறுத்தலுக்கு ஆளாக் கப்பட்ட சின்னார் பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி யின மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுடன் உயர்ந்த மலைக் குன்றுகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் காட்டு யானைகளை விரட்ட கொண்டு வரப்பட்ட இரண்டு கும்கி யானைகளைத் திரும்பவும் டாப்சிலிப் யானைகள் முகாம்களுக்கே வன துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.இதனால் மீண்டும் யானை குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுமோ என அச்சத்தில் மலைவாழ் மக்கள் உள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கத்திடம் கேட்ட போது, கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி நீர் ஆதா ரங்களான ஆறுகளுக்கு காட்டு யானை கள் வந்திருக்கலாம். இதன்காரணமாக ஊருக்குள் வந்திருக்கக்கூடும். தற்போது பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. இத னால் வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் வனப்பகுதியிலேயே கிடைக்கக் கூடும். எனவே, இனி குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வர வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அதேநேரம், பொள்ளாச்சி அடுத்த நவ மலை மற்றும் சின்னார்பதி, அன்பு நகர், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது போன்ற உயிரி ழப்புகளைத் தடுக்கும் விதமாக நவ மலை பகுதியில் நிரந்தரமாக யானைகள் முகாம் அமைத்து மலைவாழ் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் வலியுறுத்தியுள்ளார்.