கோவை, ஜூலை 11 – ஜிஎஸ்டி செலுத்துவதில் ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக வியாழனன்று ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த பி.ராஜமாணிக் கம் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் ஸ்ரீ மதுரா டிரேடர்ஸ் என்ற ஐரான் ஸ்கேரப் தொழில் நடத்தி வருகிறார். இவர்களி டம் பாலசுப்ரமணியம் என்பவர் இவர்களின் கணக்கு வழக்கு களைப் பார்த்து வந்தார். மேலும், அவர் தனியாக ஐரான் கம் பெனியை நடத்தி வருகிறார். இந்நிலையில், 15 வருடங்க ளுக்கு மேலாக நம்பிக்கைக்குரியவர் என்ற காரணத்தால் ஜிஎஸ்டி துறையிடம் கணக்கு வழக்குகளை சமர்பித்து பராமரித்து வந்தார். இந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் ஜிஎஸ்டி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி வேறு நபர்களி டம் வியாபாரம் செய்து ரூ. 2,81,70,000 இழப்பு ஏற்படுத்தி யுள்ளதாக ராஜமாணிக்கம் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவை கொண்டையம் பாளையத் தில் வசித்து வரும் ஆர். பாலசுப்ரமணியம் என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.