tamilnadu

img

குப்பைகளை பிரிக்கும் மையம் அமைக்கும் பணியை நிறுத்த கோரிக்கை

 திமுகவினர் ஆர்ப்பாட்டம்- கைது

கோவை, ஜன.10- கோவை மாவட்டம் மசக்காளிபாளையத்தில் குப்பை களை தரம் பிரிக்கும் மையம் புதிதாக அமைக்கப்படுவதை கண்டித்து திமுகவினர் வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.  கோவை மாவட்டம், மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசி டன்சி அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில், மசக்காளிப்பாளையம், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரிக் கும் மையம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்புப் பகுதியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் குப்பைக் கிடங்கு மையம் அமைக்கப்பட்டால், பொதுமக் கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.  ஆகவே , இந்த குப்பைக்கிடங்கு மையத்தை  குடியிருப் புகள் இல்லாத பகுதிகளில் அமைக்க வேண்டும். மேலும் திட்டச்சாலை அமைய உள்ள இடத்தில், குப்பைப் பிரிக் கும் மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இதற்கிடையே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்த னர்.

;