மே.பாளையம், மார்ச் 18 - கொரோனா வைரஸ் பர வலை தடுக்க மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகை இடை யேயான மலைரயில் சேவை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென் னக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட் டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இம்மலைரயிலில் பயணிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரிப்பின் எதிரொ லியாக பல்வேறு நாடுகளில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் உள்நாட்டு மக்களுக்கு பயணங் களை தவிர்க்குமாறு அரசு சார்பில் அறிவு றுத்தப்பட்டது. இதனால் கடந்த இரு வார காலத்திற்கும் மேலாக மலைரயி லில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. மேலும், நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்க ளில் மக்கள் கூடுவதை மாவட்ட நிர்வாக மும் தடை செய்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை 18 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இரு வார காலத்திற்கு மேட்டுப் பாளையம் – உதகை இடையே இயக்கப் பட்டு வரும் தினசரி மலைரயில் சேவை ரத்து செய்யபடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.