tamilnadu

img

மருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

, அக். 30- தருமபுரியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்  உயிரி ழந்ததாக கூறி அவரது உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்டம், கோட் டப்பட்டியை சேர்ந்தவர் மணி கண்டன் (30). முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (24). இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மஞ்ச மேடு கிராமம் ஆகும். பிரியாவுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 3ஆவது பிரச வத்திற்காக செவ்வாயன்று இரவு பாரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரியா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி ஏற்படாததால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைக் கப்பட்டார்.  தருமபுரி அரசு மருத்துவ மனையில் புதனன்று அதிகாலை 3 மணியளவில் அவருக்கு ஆண்  குழந்தை பிறந்தது.

ஆனால், இதன் பின்னர் பிரியாவுக்கு அதிகள வில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அதி காலை 5 மணியளவில் உயிரி ழந்ததாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதனால் அதிர்ச் சியடைந்த அவரின் உறவினர் கள் உடலை பெற மறுத்து மருத்து வமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரியாவின் உறவினர் கூறுகையில், அதி காலையில் பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது பிர சவம் பார்த்த மருத்துவர்கள், பிரியாவை மிகவும்  தரக்குறைவாக பேசியுள்ளனர். இதன்பின்னரே பிரியா இறந்துவிட்டதாக தெரி வித்தனர். பிரியாவுக்கு ரத்தப் போக்கு அதிகமான நிலையில் அவரை மருத்துவர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி விட்டனர். இதனால்தான் அவர் உயிரிழந்தார். அவருக்கு முறை யாக சிகிச்சை அளித்து இருந் தால் அவரது உயிர் காப்பாற் றப்பட்டு இருக்கும். எனவே அம் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை  உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தார். இதற்கிடையே, பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது  கணவர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதனையடுத்து பிரி யாவின் உடலை உறவினர்கள் பெற்று அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்சென்றனர்.