tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலை செய்ய முயற்சி பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு

தருமபுரி, ஆக.2- சாதி ஆணவப் படுகொலை செய்ய முயற்சித்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம் பிக்கம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் அஜித்குமாரும் (23),  தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா(22)  என்பவரும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தலை மறைவாக உள்ளனர். இதில் பிரியா வின் குடும்பத்தினரின் அச்சுறுத்த லால் அஜித் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெங்க ளூரில்  தங்கி உள்ளனர். இதனை அறிந்த பிரியாவின் உறவினர் கள் ஜூலை 24 ஆம் தேதியன்று தாளப்பள்ளத்தைச் சேர்ந்த முனி யப்பன் மற்றும் பிரியாவின் பெற் றோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வர்கள் பெங்களூருக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அஜித்தின் பெற்றோர்களான காளிதாஸ், வித்யா மற்றும் நாகராணி உள் ளிட்ட 8 பேரை  தாளப்பள்ளம் கிரா மத்திற்கு அழைத்து வந்தனர். அன்றிரவு 12 மணியளவில் அஜித்தின் பெற்றோர்களை  மரத் தில் கட்டி வைத்தனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர். மேலும் சாதி  பெயரை சொல்லி தகாத வார்த்தை களால் திட்டியுள்ளனர். மறுநாள் காலை வரை அடித்து துன்புறுத்தி உள்ளனர். பின் ஜூலை25  ஆம் தேதியன்று காலையில் தாசம்பட்டிக்கு அழைத்து சென்று  ஒருவீட்டில் அடைத்துவைத்து மீண்டும் தாக்கி உள்ளனர். அதன்பின் ஒகேனக்கல் வனத் துறை விடுதியில் அன்று இரவு  தங்க வைத்தனர்.பின்னர் அஜித்தின் தந்தை காளிதாசை தனி யாக அழைத்துச்சென்று பிறப்பு றுப்பில் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதன்பின் அவர்களிடம் வெற்று பத்திரத்தில் கையொப்பம் வாங் கியுள்ளனர். அஜித்தின் தாய் வித்யாவை அடி வயிற்றில் அடித்ததில் ரத்தபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அழைத்து வந்த 8  பேரையும் காரில் அழைத்து சென்று  ஓசூரில் விட்டுச் சென்று விட்டனர்.  இதையடுத்து கொடூர தாக்குதலுக்கு  ஆளான காளிதாஸ், தாய் வித்யா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், காதல் திருமணம்  செய்த அஜித்-பிரியா ஆகி யோரை ஆணவப் படுகொலை  செய்ய முயற்சித்து வருகிறார்கள்.  எனவே, எங்களை கொடுமைப் படுத்திய சாதிவெறியர்கள் மீது  வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட அஜித்தின் தாயார் வித்யா உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.