tamilnadu

நீலகிரி முக்கிய செய்திகள்

நீலகிரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு மையங்கள் அறிவிப்பு

நீலகிரி, மே 28-தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜுன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் நீலகிரிமாவட்டத்தில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் ஸ்ரீ சாந்தி விஜய் மேல்நிலைபள்ளி, புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி, அருவங்காடு புனித அன்னாள் (பெ) மேல்நிலைப்பள்ளி, உதகைபெத்லகேம் (பெ) மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலூர் பாத்திமா (பெ) மேல்நிலைப்பள்ளி, மற்றும் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வு மையங்களில் தாள் ஒன்றை 979 ஆசிரியர்களும், தாள் இரண்டிற்கு 2777 ஆசிரியர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் மற்றும் காற்றோட்ட வசதியுடன் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி தேர்வருக்கு சொல்லி எழுதுபவர் சலுகை வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு தரைத் தளத்திலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் தேர்வு அறைக்குள் நுழைவுச் சீட்டு, இரண்டுகருப்பு அல்லது நீல நிற பந்து முறை பேனா மட்டும் அனுமதிக்கப்படும். கைக்குட்டை, துண்டுத்தாள், செல்போன்களுக்கு அனுமதியில்லை. வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் புகாருக்கு 1077 ஐ அழைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி, மே 28-நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பானபுகாருக்கு அவசர கால மையத்தின் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077 ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை, புயல், வெள்ளம்மற்றும் நிலச்சரிவு போன்ற விபரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள கூசூளுஆஹசுகூ என்ற செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாவட்ட  ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.