tamilnadu

img

குழந்தைகளை பட்டினி போடும் மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 12 – நான்கு மாத கால உணவூட்டு செலவினத் தொகையை வழங்கா மல் திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் சத்துணவுத் திட்டக் குழந்தை களைப் பட்டினி போடுவதாக குற்றஞ்சாட்டி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட 136 சத்துணவு மையங்க ளுக்கு கடந்த அக்டோபர் 2019 முதல் ஜனவரி 2020 வரை நான்கு மாத காலத்திற்குரிய உணவூட்டுச் செலவினத் தொகையை மாநக ராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துண வுத் திட்டம்) மற்றும் திருப்பூர் மாந கராட்சி ஆணையாளரிடமும், உதவி ஆணையரிடமும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், 136 சத்துணவு மையங்களிலும் குழந் தைகளுக்கு உணவு வழங்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான, சத்துண வுத் திட்டத்தைச் சீர்குலைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண் டித்து பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாயன்று தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்து ணவு ஊழியர் சங்க மாநகராட்சித் தலைவர் பி.மகேந்திரபூபதி தலைமை வகித்தார். மாநகராட் சிச் செயலாளர் ஆர்.ஆதிலட்சுமி கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாக்கியம், மாவட்டச் செயலாளர் ஆர்.ராமசாமி, பொரு ளாளர் கே.கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ரீட்டா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஆறுமு கம், பி.ஜெயமேரி, ஏ.ராஜேஸ்வரி, ஜி.கற்பகம், என்.தனலட்சுமி, பி. செல்வி, ஏ.ஜெயந்தி, கே.ஆர்.நாக ராஜன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். நிறைவாக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.சக்தி கண் டன உரையாற்றினார். இதில், சத்துணவுத் திட்ட ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.