குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் பென்சனர் நலச்சங்கத்தின் கோவை கிளை தலைவர் புஷ்பராஜ், உதவி தலைவர் நாகராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.மணி ஆகியோர் தலைமையில் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இபிஎப் அலுவலகத்தில் இபிஎப் ஆணையளரிடம் புதனன்று மனு அளித்தனர். இதில் ஏராளமான இபிஎப் நலச்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்.