சும்மா தானே இருக்கிற... காலங்காலமாய் ஒவ்வொரு வீட்டி லும் ஒலிக்கும் சொற்கள். வீட்டின் தலைவியாகவும், தாயாகவும், தார மாகவும் உள்ள சம்பளம் வாங்காத உழைப்பாளிகளை நோக்கி எழுப்பப் படும் வார்த்தைகளே அவை. தற் போது, கொரோனா தொற்று பரவ லைத் தொடர்ந்து ஒட்டுமொத்த நாடும் 50 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவிற்கு முன் ஓரளவு ஓய் வெடுக்க கிடைத்துக் கொண்டிருந்த நேரமும், தற்போது குடும்ப உறுப் பினர்களுக்கு நேரத்திற்கு ஒரு உணவு, பொழுதுக்கு ஒரு சிற் றுண்டி என செய்வதில் கழிந்து கொண்டிருக்கிறது. வீட்டில் கண வன் வேலைக்குச் செல்லும் குடும் பங்களில் பெண்கள் நிலை இவ்வாறு இருக்க, வீட்டின் ஒட்டுமொத்த பொறுப்பையும் சுமக்கின்ற பெண் களின் நிலை இன்னமும் மோசமாக உள்ளது. இவ்வாறு கோவை மாந கரில் தினக்கூலியை நம்பியும், வாரச் சம்பளத்தை நம்பியும் குடும்பத்தை நடத்தி வந்த பெண்கள் சிலரை சந்தித்தபோது..
பத்மா
கணவன் இல்லாத நிலையில் தினக்கூலி வேலைக்குச் சென்று 8 பேர் உள்ள ஒட்டுமொத்த குடும் பத்தை தனியாக காப்பாற்றும் பத்மா கூறுகையில், 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பயிலும் இரு குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலர்கள் அளித்த உணவினை தினமும் உண்டு வந்து சமாளித்தோம். அதுவும் தடை செய் யப்பட்ட பின்னர், வேறு வழியில் லாமல் குழந்தைகளின் மேற்படிப் பிற்கு சேர்த்து வைத்திருந்த பணத் தினை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். தற் போது தினக்கூலிக்கு ஆட்கள் அழைக்கப்பவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நம்பிக்கையே எங்கள் 8 பேரின் வாழ் வாதாரமாக உள்ளது என்கிறார்.
ஜானகி
என் அக்காவோடு இணைந்து கடந்த ஒரு வருடமாக சமோசா கடை நடத்தி வந்தேன். ஊரடங்கில் கடை கள் நடத்த அனுமதிக்கப்படாததால் கடந்த 50 நாட்கள் பெரும் சிர மத்திற்கு உள்ளாகியுள்ளோம். நிவாரணப் பொருட்கள் தருகிறோம் என அறிவிப்புகள் தான் சத்தமாக கேட்டோமே தவிர, ஒரு உதவியும் வீடு வரை வந்து சேரவில்லை. ரேசன் கடை அரிசியும், சேர்த்து வைத்திருந்த சொற்பப் பணமும் மட்டுமே எங் களை உயிர் வாழ வைத்து வருகிறது. இனி பள்ளிகள் திறந்தால் குழந்தை களுக்கு கட்டணம் செலுத்த வேண் டும் என்கிற நிலையில் என்ன செய் வதென்று தெரியாமல் உள்ளோம் என்கிறார்.
பிரேமா
எந்தவொரு சேமிப்பும் இன்றி வாழ்ந்து வரும் நாங்கள், இப்போது தன்னார்வலர்கள் உதவியாலேயே ஊரடங்கில் வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் உடல்நலக் குறை வால் பல ஆண்டுகளாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தினமும் கிடைக்கும் வேலையைச் செய்து வந்தே, உடல் நலம் குன்றியுள்ள என் கணவரையும், 11 ஆம் வகுப்பு பயி லும் என் மகனையும் காத்து வந் தேன். குடும்பமே உணவுக்காக தத் தளிக்கும் இச்சூழலில் பொதுத் தேர்வுக்கு மகனை அனுப்ப வேறு பயமாக உள்ளது. தொற்று வேக மாகப் பரவி வரும் நிலையில் தேர்வு களையாவது தள்ளி வைத்தால் சரியாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
துளசிமணி
கணவர் மாற்றித்திறனாளி என் கிற நிலையில், திருமணம் ஆனதி லிருந்து வேலைக்குச் சென்று கண வரையும், என் இரு மகள்களையும் காப்பாற்றி வருகிறேன். தற்போது, வீட்டு வேலைக்குச் சென்று கொண் டிருந்த இடத்திலும் வர வேண்டாம் எனக் கூறி விட்டதால் வருமானமும், உணவுமின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சென்ற மாதம் வரை தன்னார்வலர்கள் மற்றும் சில கட்சிகள் வழங்கிய நிவாரண உத வியால் குடும்பத்தை ஓட்டி வந்தோம். இம்மாதம் அதுவும் இல்லை. ஏற் கனவே, குடும்ப வறுமையின் கார ணமாகவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் மகள்களின் படிப்பினை நிறுத்த வேண்டியதாயிற்று. இப்போது இரு மகள்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் திக்கற்று நிற்கிறேன் என்கிறார்.
ராணி
அரசு வழங்கிய 1000 ரூபாய் நிதி உதவியும், ரேசன் பொருட்களும் மட்டுமே எங்களுக்கான வாழ்வா தாரமாய் இருந்தது என்கிறார் சாலை யோரம் இளநீர் விற்று வாழ்க்கை நடத்தி வரும் ராணி. மகன்கள் இரு வரும் குடும்பத்தோடு வாழ்ந்து வருகையில் நானும், எனது கண வரும் தனியாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் ஆட்டோ ஓட்டி வரு கிறார். கொரோனா ஊரடங்கால் இரு வருக்குமே வாழ்வாதாரம் முடங்கிப் போனதால், மிகவும் சிரமப் பட்டு வருகிறோம். நான் கூட கடந்த சில நாட்களாக கடைக்கு வந்து விட்டேன். ஆனால் அவர், ஒரு முறை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்க ஆட்டோவை எடுத்து வெளியே சென்றபோது (இரு சக்கர வாகனம் இல்லாததால்) போலீஸ்காரர் பிடித்து அபராதம் விதித்து விட்டதால், மீண்டும் வெளியே வர அச்சமாக உள்ளது என் கிறார்.
புஷ்பராணி
அன்றாடங்காய்ச்சியான நாங் கள் தினமும் வேலை செய்தால் மட் டுமே அந்நாளுக்கான உணவு கிடைக்கும் என ஆரம்பிக்கிறார் சாலையோரம் காய்கறி விற்றுவரும் புஷ்பராணி. மேலும் அவர் பேசு கையில், சுமார் 30 நாட்களாக அக் கம் பக்கத்தினர் செய்து வந்த உத வியால் நாட்களை ஓட்டி விட்டோம். ஆனால், இனி நோய் வந்தாலும் வேலையைப் பார்த்தால் தான் பட் டினியிலிருந்து நாங்கள் தப்பிக்க முடியும். இந்நிலையில் பத்தாம் வகுப் பிற்கு தேர்வு வைக்கப்படும் என்னும் தகவல் மிகவும் அதிர்ச்சியாக உள் ளது. 10 ஆம் வகுப்பு பயிலும் என் ஒரே பையனுக்கும் நோய் தொற்றி விடுமோ என மிகவும் பயமாக உள்ளது, என்கிறார்.
ராமாத்தாள்
கடந்த 40 வருடங்களாக சந்தை சந்தையாக சிறு முதலீட்டில் தேங் காய் மற்றும் காய்கறி விற்று கண வனை கவனித்து வரும் ராமாத்தாள் கூறுகையில், நான் தினமும் காய் விற்றால் தான் எனக்கும், என் கண வருக்கும் உணவு. மகன்கள் அவர வர் குடும்பங்களை பார்த்துப் போய் விட்டதால் எங்களுக்கு இது ஒன்றே வாழ்வாதாரம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மிகவும் சிரமப்பட்டுள்ளோம். ரேசனில் வழங் கப்பட்ட அரிசியே ஒரே நம்பிக்கை யாய் இருந்தது. அதுவும் 7 கிலோ மட்டுமே கொடுத்தார்கள். மீதியை கேட்டதற்கு இவ்வளவு தான் வழங்க முடியும் என விரட்டினர். 40 வருடம் கடை போட்டும் தற்போது அடுத்த வேளை உணவிற்கே பிறரை எதிர் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம் என்கிறார்.
சும்மா தானே இருக்கிற என நேற்று வரை கூறப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று ஒட்டு மொத்த உலகையும் தூக்கிப் பிடித்துப் போராடி வருகின்றனர். மறுபுறம், இந்த தேசத்தை தூக்கிச் சுமப் பதாக தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டம் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் போட்டு விட்டோம் என்றும், ரேசன் கடைகளில் 1000 ரூபாய் போட்டு விட்டோம் எனக்கூறி உண்மையிலேயே சும்மா தான் இருக்கிறது என்பதையே இக் கொரோனா ஊரடங்கு நமக்கு பாடம் புகட்டியுள்ளது.
-ச.காவியா.