மேட்டுப்பாளையம், செப்.12- மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் குழந்தையின் உடலில் ஊசி சிக்கி கொண்ட சம்பவம் தொடர் பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான மருத் துவக்குழுவினர் விசாரணை மேற் கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த மலர்விழி என் பவருக்கு கடந்த ஆக.20 ஆம் தேதி யன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து குழந் தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊசி முறிந்து பாதி ஊசி குழந்தையின் தொடை பகுதியிலேயே இருந்துள்ளது. இந்நிலையில், செப்.9 ஆம் தேதி குளிக்க வைக்கும்போது குழந்தையின் தொடை பகுதியில் இருந்த ஊசி வெளியே தெரியவந்த நிலையில், 20 நாட்களுக்கு பின்னர் குழந்தையின் உடலில் இருந்து ஊசி அப்புறப்படுத்தப்பட்டு மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து குழந்தையின் பெற் றோர் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் அலட்சியமாக செயல் பட்ட பணி மருத்துவர் மற்றும் செவி லியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித் தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப் படாத நிலையில் குழந்தையின் பெற் றோர் இது குறித்து மேட்டுப்பாளை யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே இச்சம்ப வம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டு சுகா தாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப் பியது. இந்நிலையில் வியாழனன்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலை மையிலான மருத்துவக்குழுவினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டனர். மருத்துவ மனையில் இருந்த பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்த மருத்துவக்குழு வினர் தடுப்பூசி போடப்பட்ட தினத் தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து குழந்தையின் தாயார் மலர்விழியிடம் கேட்டறிந்தனர். மேலும், மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவர் கள் மற்றும் ஊசி செலுத்திய செவி லியரிடமும் விசாரணை நடைபெற் றது. இந்த மருத்துவ குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கை யின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட் டுள்ளது.